06 Dhyana Yoga
கருமநெறியையும், துறவையும் பற்றி விளங்கச் சொன்னேன். இப்போது காலத்தே பயனளிக்கும் தியானநெறி, கடமைக்கு உகந்த வழியாவதைப் பற்றிச் சொல்கிறேன்.
கருமநெறியையும், துறவையும் பற்றி விளங்கச் சொன்னேன். இப்போது காலத்தே பயனளிக்கும் தியானநெறி, கடமைக்கு உகந்த வழியாவதைப் பற்றிச் சொல்கிறேன்.
சிவ தத்துவ அறிவு விளக்கம் – சிவம், சக்தி, சதாசிவம், மஹேஸ்வரம், சுத்த வித்யா எனும் ஐந்து சிவ தத்துவ அறிவு விளக்கம் வேண்டல்.
குருவரம் ஒன்றே தருவது மனிதரின் – புருஷார்த் தமெனும் போதனை நான்கு
தர்மம் அர்த்தம் காமம் மோக்ஷம் -தத்துவம் நான்மறை தருவது கேட்க
பல கோயில்களுக்கும், மீண்டும் மீண்டும் சென்று, சித்திரங்களை வரைவது கண்டு, நண்பர்கள் ஏன் போட்டோ எடுத்து வைத்துக் கொண்டு வரையக்கூடாது என நல்லெண்ணத்தால் யோசனை கூறினர். கண்களால் மீண்டும் மீண்டும் தரிசித்து, மனதில் தியானத்தால் யூகித்து, மதியால் தீவிர யோசித்து சித்திரங்களை வரையும் வாய்ப்பைவிட வேறு என்ன பாக்கியம் வேண்டும்?
முதற்பாடல் மாணவர்களாகிய நமக்கு உரித்தான கடமைகளையும், ஜகத்குருவாகிய ஸ்ரீதட்சிணாமூர்த்தியின் திருவுருவ அழகையும் விளக்குகிறது. அடுத்த 24 பாடல்களும், உயிர்களுக்கு ஆதாரமான தத்துவங்களில் ஞானசுத்தி அடையக்கோரி, ஜகத்குருவிடம் வேண்டுகின்றன.
ஆதி குரு தக்ஷிணாமுர்த்தி வழிபாடு காஞ்சி ஸ்ரீமடம் ஸ்ரீ குரு ஆசியுரை நாள் – 26 – 03 – 98 ஜனன, மரண, துக்கச் சேததக்ஷம் குரும் நமாம: ஞானதாதாவான குருவிற்கு மேம்பட்டவரில்லை என்றே பெரியோர் கூறுவர். எல்லா குருவரர்களுக்கும் குருவான ஸ்ரீபரமேஸ்வரன் தானே விரும்பி எடுத்துக் கொண்ட திருக்கோலம் ஸ்ரீதக்ஷிணமூர்த்தி. முதியவர்களுக்கும் முதியவராக, முன்னவருக்கும் முன்னவராக இருப்பவர் பரமயுவாவாகக் காட்சி தருகிறார். மரங்களில் மூத்ததும், அரசுமான வனஸ்பதியான ஆலமரத்தின் அடியில் ப்ரும்ம ஸ்ருஷ்டியில் முதலில் படைக்கப் பெற்றிருந்தும் வயதால் எல்லோருக்கும் மூத்தவராயினும், பாலவடிவிலே, ஞான உபதேசம் பெரும் ஆர்வத்தால் எப்போதும் ஸநாகாதி யோகியர் சிஷயர்களாகத் தன்னைப்
எல்லாம் வல்ல இறையருளும், குருவருளும், பெற்றோரின் நல்வினைப்பயனும் காரணமாக என் சிறுமதி விளைத்த பெருநிதியாக ஸ்ரீ ஆறுமுகர் அந்தாதி எனும் இந்நூலைச் சமர்ப்பிக்கின்றேன். லண்டன் ஸ்ரீமுருகன் கோவிலின் முதற்குரு, தவசி, ஸ்ரீலஸ்ரீ நாகநாத குருக்கள், ஓர் முறை என்னிடம் “அந்தாதி பாடுங்கள்” எனப்பணித்தார்.
ஆண்மை Read at ELAB ஆளுமையே ஆண்மை அன்புடனே உறவாடிப் பேணுமையே பெண்மை எனக்கொண்டால் – சூழுலகில் பெண்மை ஆண்களுக்கும் பேராண்மை பெண்களுக்கும் மென்மை போர்த்திருக்கும் மெய் உமையாள் தலைவன் உமைஆள் சிவனாய் அமைவான் ஆள்உமை அதுவே – இமையாய் ஆணோடு பெண்ணே அனுசரித் தினித்திருக்க நாணோடு இழைத்த வீணை மாரைநிமிர்த்தி மயிர்க்கூரை இதழ் பரத்தி ஊரையடக்கும் உயர்வீரம் – கூரையிட்டு குலத்தின் நலங்காக்க குனிந்துழைக்கும் செயல்பாடும் நிலத்தில் ஆண்மையிது நிஜம் ஈராக் எதிரும் புதிரும் பதியும் பகையும் விதியில் விதைத்து உயிரில் உதைத்து சதியில் சறுக்கி மதியில் சுருக்கி உதிரம் உதிரும் வதனம் விசனம் பொதுவில் புவனம்
Maha Kavi Kalidasa – Sample Treatise
SOLITARY REAPER – An inspired tamil version