Sivapuranam by Manickavasagar (06-07)

06. வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க அலை பாய்கின்ற எண்ணங்களின் சிக்கலை (வேகம்) முடித்து (கெடுத்து) நம்மை ஆட்கொள்கின்ற தலைவனுடைய (ஆண்ட வேந்தன்) திருவடிகளைப் பணிவோம் (அடி வெல்க). ‘வேகம்’ எனும் சம்ஸ்கிருத மூலச் சொல்லுக்குத் தமிழில்  ‘விரைவு’, ‘குழப்பம்’, ‘விளைவு’, ‘சிக்கல்’ என்றெல்லாம் பொருள் உண்டு. நம்முடைய மனமே,   ஒன்று விட்டு ஒன்றில் ஓடிக் கொண்டிருப்பதும், குழப்புவதும்,  வினைப் பயனை விளைப்பதும், பிறவிச் சிக்கலில் பிணைப்பதும் ஆகிய எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கிறது.  எனவே மனதின் வேகத்தைக் கெடுப்பதனால், அதாவது, மனதின் அலைக்கழிப்பை நிறுத்தி, எண்ணங்களைச் சீரமைப்பதினால், நமக்கு விடுதலை கிடைக்கிறது. ‘சித்த சுத்தி, த்ருட புத்தி’  அதாவது

Read More

Sivapuranam by Manickavasagar (03-05)

03. கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க திருப்பெருந்துறை எனும் தலத்திலே (கோகழி)  ஆட்சி செய்துவரும் (ஆண்ட), ஒப்பற்ற ஆசானின் (குரு மணி தன்) திருவடிகளைப் பணிவோம் (தாள் வாழ்க). ‘கோகழி’ எனும் சொல் குறுந்த மரத்தைக் குறிப்பது.   குறுந்த மரத்தின் அடியில், அமர்ந்திருந்த ஒரு நல்லாசிரியரைப் பரசிவனாய்க் கண்டு, மாணிக்கவாசகர் நல்லறிவு பெற்ற இடம் தமிழகத்தில் உள்ள திருப்பெருந்துறை எனும் ஊர்.  நல்லாசிரியராக வந்து அறிவு புகட்டி, பிறகு மறைந்த அக்குரு மனிதர்,  எல்லாம் வல்ல பரம்பொருளே என்றும், திருப்பெருந்துறை ஆலயத்தில் குடிகொண்டு அருள் பாலிக்கும் பரசிவனே என்றும் உறுதிபட்ட மனதால், அத்தலத்தையே தமது இருப்பிடமாகக் கொண்டு,

Read More

Sri Kanchi Paramacharya Stotram by Simizhi

Sri Kanchi Paramacharya Stotram by Simizhi

காஞ்சி ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரிவா துதி – சம்ஸ்கிருத மூலம் ப்ரவசன சக்ரவர்த்தி, அபிநவசுகர் ப்ரம்மஸ்ரீ சிமிழி K. கோபால தீக்ஷிதர்
வாஜபேயஜி (வாயபேய யாகம் செய்தவர்) – தமிழில் மீ. ராஜகோபாலன்

Sivapuranam by Manickavasagar (02)

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க சிறு நேரம் கூட (இமைப்பொழுதும்) என் உள்ளத்தைவிட்டு (என் நெஞ்சில்) அகலாமல் இருப்பவன் (நீங்காதான்) திருவடிகளைப் பணிவோம் (தாள் வாழ்க) இமைப்பொழுது என்பது, நாம் கண் சிமிட்டும் அளவினாலன காலத்துளி.  இமைப்பொழுது என்பதையும்விட, காலம் மேலும் துல்லியமாகவும் அளக்கப்படக் கூடியதுதான்.  எனினும், மனிதர்களாகிய நமக்கு, இமைப்பொழுது என்பதே, அனுபவத்தில் காணக்கூடிய துல்லிய காலம். எனவேதான் மாணிக்கவாசகர், இமைப்பொழுது எனும் கால அளவைக் காட்டி, அந்த இடைவெளியிலும்கூட நம்மை விட்டு விலகாமல் நம்முள்ளேயே இறைவன் இருக்கின்றான் எனக் கூறுகின்றார். அந்த இறைவன் நம்முள்ளே எங்கே இருக்கிறான்? ‘அகப்படும் சிவம்’ அல்லவா, அதனாலே,

Read More

Sivapuranam by Manickavasagar (01)

01 நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க சிவாய நம எனப் பணிவோம் (நமச்சிவாய வாழ்க), தலைவனின் திருவடிகளைப் பணிவோம் (நாதன் தாள் வாழ்க) ‘வாழ்க’ என்பது வாழ்த்துவதாகக் கொள்ளப்பட்டாலும், வாழ்த்துதல் என்பது, உண்மையில் யாரை வாழ்த்துகின்றோமோ, அவருக்காக நாம் ஏற்கும் வணக்கம் என்பதும் ஆகும். ஒருவருக்கு நற்பயன் விளையட்டும் என வாழ்த்துவது, அப்பயனை இறைவன் அளிக்கட்டும் என, ஒருவரின் பொருட்டு நாம் செய்யும் இறை வணக்கம்தான். எனவே இங்கே ‘வாழ்க’ என்னும் சொல்லுக்கு, இறைவனை வழுத்துவது அல்லது வணங்குவது என்றே பொருள் கொள்ள வேண்டும்.  மேலும், ‘வாழ்க’ எனும் சொல், ‘வாழ்வதற்காக’ எனவும் பொருள் தருவதால், வாழுதல்

Read More