Adiguru – Jiva Tattvam
ஆதிகுரு தக்ஷிணாமூர்த்தி துதி
ஆன்ம தத்துவ அருள் வேண்டல்
கர்மேந்திரியம் – கழிவாசல்
உண்டதும் உணவிலே ஒதுங்கிடும் எச்சத்தை
ஓயாமல் பிரித் தெடுக்கும்
ஓடிடும் உதிரத்தில் ஒதுங்கிடும் மிச்சத்தை
உப்பெனத் தடுத் திணைக்கும்
பண்டமும் பழுதறப் பார்த்திடும் வேர்த்திடும்
படைத்துடற் கழிவா சலைப்
பாவித்து நாமுலகில் சேவித்துக் கற்றிடும்
பாடத்தில் அறியும் உண்மை
கண்டதும் கேட்டதும் கைகொள்வ தெதிலும்
கசடறக் கற்க வேண்டும்
கடைவாசல் தேறாத அடையாளங் காண்கையில்
கழித்தவை ஒதுக்க வேண்டும்
தண்டமுன் னடைக்கலம் தட்சிணா மூர்த்தியே
தாயனே விலக்கும் ஞானம்
தரவேண்டும் நந்நிலை வரவேண்டும் சந்நிதி
தத்துவ முத்தி முதலே