Adiguru – Jiva Tattvam
ஆதிகுரு தக்ஷிணாமூர்த்தி துதி
ஆன்ம தத்துவ அருள் வேண்டல்
ஞானேந்திரியம் – கண்
கண்ணே கலையறிவு காணுமதி காரிவிழி
காணப் பிறக்கும் அறிவும்
காருண்ய தானதறி சூர்யப்ர காசமும்
காட்சிக் களித்து உதவும்
மண்ணே ழுலகமும் மகிழவும் மற்றவரை
மதித்துப் பழகும் நிலையும்
மாறாத செழுமையும் மறையாத ஆனந்தம்
மகிழ்ந்தாடும் நன்மக்க ளும்
முன்னே தெரியவும் முக்காலம் அறியவும்
மூடித் திறக்கும் இமையுள்
முதலான சிவநாதன் நடமாடும் தரிசனம்
முற்றும் தெரிய வேண்டும்
தண்ணே யணிபித் தாமறை நாயகா
தாரகா நீயறிய வா
தருமனே குருபரா தயைபுரி சங்கரா
தட்சிணா மூர்த்தி குருவே