Adiguru – Jiva Tattvam
ஆதிகுரு தக்ஷிணாமூர்த்தி துதி
ஆன்ம தத்துவ அருள் வேண்டல்
ஞானேந்திரியம் – செவி
ஒலிக்கு ஆதாரம் ஓங்காரமே மிசை
ஓசைமின் னனுவில் விரியும்
ஓயாத சத்தத்தில் ஒருமித்த மோனத்தை
உணரத் தெரியும் அறியும்
விழிக்கு எட்டாது விரியும்ஏ காந்தமே
வேதவடி நாதம் இதமாய்
விளங்கும் சிவமயந் துலங்கும் உணர்வினை
விரையப் புகட்டும் செவியே
மொழிக்கு உதவட்டும் முக்காலம் உணரட்டும்
மூத்தோர் வார்த்தை அமிர்தம்
முரண்பாடு காணாது தரமான சத்தியம்
முற்றும் கேட்க வேண்டும்
வழிக்கு வல்லவனே வாய்பேசா நல்லவனே
வரமிந்தக் கரமீது தா
வரசிவனே தென்னகத்துப் பரசிவனே ஆதியே
வடிவழகே ஞான குருவே