Adiguru – Jiva Tattvam
ஆதிகுரு தக்ஷிணாமூர்த்தி துதி
ஆன்ம தத்துவ அருள் வேண்டல்
ஞானேந்திரியம் – நாக்கு
பக்குவ மறியவும் பற்சுவை புரியவும்
பல்லிடை அடங்கி ஆளும்
பாம்பனைய நாவிலுரு வாகுமுமிழ் நீரெனும்
பசியமுது வசியமுற நான்
சற்குண வாளனே சங்கரா சுயம்புவே
சனகாதி முனிவ ராதி
சாரணரும் ஓங்காரக் காரணம் அறியவே
சாட்சியமர் வான தெற்கு
திக்குற நின்றநிலை நெக்கு நெக்குருகி
திருவடியில் தினமடிய நான்
தேடுவது அடையவே நாடுவது அறியவே
தேவரிணை யாக உலகில்
நற்குண மடைந்துபரி பக்குவ நிலைகடந்து
நாவமுது கூட வைப்பாய்
நாதவடி வேபரம மோனவடி வானசிவ
நாகமணி யோக நிலையே