Adiguru – Jiva Tattvam
ஐந்துறைவாயு – பிராணவாயு
இதயம் இருக்கும்நுரை ஈரல் இயக்கும்முறை
ஈர்க்கும் மூச்சின் அளவில்
இணையும் உயிருமுடல் பிணையும் நேருரிமை
இயலும் உயிரின் வாயு
நிதமும் உடலில்கசி நீரின் தாகம்பசி
நிறையச் சீர் அளந்த
நிலையே பிராணமய கலையே நானறிய
நிஜமே பேரறிவு தா
உதயம் ஆகியது உள்ளம் மாறியது
உயரும் நந்நிலை யிதே
உயிரின் சாசுவதம் ஓடும் சுவாசமென
உணரும் நல்லறிவு தா
பதியும் பாதிமதி முடியும் பாசுபதி
பரனே சிவமய சுதா
பயனே மெளனகுரு தயவே தாரகனே
தட்சிணா மூர்த்தியலங் காரா