Adiguru – Jiva Tattvam
ஆதிகுரு தக்ஷிணாமூர்த்தி துதி
ஆன்ம தத்துவ அருள் வேண்டல்
ஐந்துறைவாயு – ஸமானவாயு
உதரத்தில் நிறையும் உணவமுது கறையும்
உருசீ ரணமாக உதவும்
உருசத்துப் பிரியும் சரிசத்துப் பரவும்
உருவாகும் அணுவில் ஆக்கும்
அதரத்தில் சுவையும் அந்தத்தில் பசியும்
ஆக்கிஉரு வாக்கி நேயம்
ஆதார மாகவுடல் தாதாய் அமைவது
அருஞ் சமான வாயு
மதுரத்தில் பூவில் மாய்கின்ற வண்டாய்
மாயத்தில் மோகத்தில் நான்
மாளாமல் உடலெனும் கோளான சாதனம்
மண்ணுலகு பயன் படுத்த
சதுரத்தில் சதுரமாய் சரிநிகர பொருத்தமாய்
சாதித்து வாழ வேண்டும்
சனகாதி முனிவரின் கனகாதி வள்ளலே
சங்கரா சிவ சம்புவே