Adiguru – Jiva Tattvam
ஆதிகுரு தக்ஷிணாமூர்த்தி துதி
ஆன்ம தத்துவ அருள் வேண்டல்
அந்தகரணம் – மனம்
மனிதராய்ப் பிறக்கினும் மன்ஹிதன் எனும்படி
மற்றோர்க் கிரங்கும் குணமோ
மன்னிக்கும் மேன்மையோ கண்ணியம் அன்பெனும்
மரியாதை அறிய வில்லை
கனியெனச் சிவமயம் கைக்கெட்டும் பொழுதிலோ
காயெனவே மாய உலகே
கைவல்ய மென்றுமனம் பொய்சொல்வ தானது
கடிதளவும் பிடிக்க வில்லை
புனிதராய்ச் சிறப்பதோ போதனை பிறப்பதோ
புக்ககம் புகக் கிடைப்பதோ
போதகனே ஆதிசிவ சாதகனே நாதசம்
பூரணனே அருள வேண்டும்
தனியராய் தவத்தினாய் தண்முகச் சிரிப்பினாய்
தட்சிணா மூர்த்தி யானாய்
தானறியும் மனத்திறம் நானறியச் செய்கவே
தருமபரி பாலன் குருவே