Adiguru – Jiva Tattvam
ஆதிகுரு தக்ஷிணாமூர்த்தி துதி
ஆன்ம தத்துவ அருள் வேண்டல்
அந்தகரணம் – சித்தம்
சித்தமே நிறையவளர் சிந்தனை நினைவுமலர்
சீலமன சாட்சி எனவே
சீவனே மூடிஉயிர் போகையில் ஏகுமுடல்
சேரவழி காட்டி யதனால்
சத்தமே மறையமனச் சாந்தியே நிறையமதி
சந்தோஷ மாக வளர
சாட்சிமனக் கண்ணாடி காட்சியினி தாகவே
சத்தியம் அருள வேண்டும்
நித்தமே நல்லநெறி நேர்மை எண்ணவழி
நினைவெலாம் உந்தண் முகம்
நிலவட்டும் சிந்தனை நிறையட்டும் ஆனந்தம்
நீடித் திருக்க வேண்டும்
தத்தமே நின்னடிமை தண்டமே சமர்ப்பணம்
தாரணியின் ஆதி குருவே
தருமபரி பாலகனே ஹரசிவசு தாகரனே
தட்சிணா மூர்த்தி அருளே