Adiguru – Jiva Tattvam
ஆதிகுரு தக்ஷிணாமூர்த்தி துதி
ஆன்ம தத்துவ அருள் வேண்டல்
அந்தகரணம் – புத்தி
எண்ணும் எழுத்தும் ஏட்டுக் கல்வியும்
எத்துணை படித்த போதும்
எதிர்காலம் ஏதென்று தெரியாத வேதனை
ஏனிந்த மதி வாதனை
பண்ணும் பரதமும் பலகலை அறிவியல்
பாடம் படித்தும் என்ன
பதவியும் பட்டமும் உதவுமோ நமனுடை
பரீட்சை விதித்த நாளே
விண்ணும் விளைபயிர் வித்தும் முளையணு
விதமும் உயிரும் பலவும்
விஞ்ஞான மென்பதும் மெஞ்ஞான மிழப்பதும்
விவேகம் என்றாகு மோ?
கண்ணும் காணாதநிலை கடவுள்நான் நானெனக்
கற்பதே புத்தி அழகு
கடவுளுன தருளுபயம் திடமெனது சத்தியம்
கல்லால் அமர்ந்த தேவே