Adiguru – Jiva Tattvam
ஆதிகுரு தக்ஷிணாமூர்த்தி துதி
ஆன்ம தத்துவ அருள் வேண்டல்
அந்தகரணம் – அகங்காரம்
நான் நானெனும் வீண் ஆணவம்
தான் தன்னுள் காணும்
நன வானது கன வாயினும்
நிஜமா மெனு மாயம்
ஊனா னதும் உடலா னதும்
உண்மை எனும் பாரம்
உணர்வோ மதி உணரா தது
உதிரும் அகங் காரம்
நான் யார்அது நீயே யெனும்
ஞானம் வர வேண்டும்
நம னாயுதம் வரும் நாளிலும்
சிவநாமந் துணை யாகும்
வான் மாலனும் மண் நான்முகன்
காணா தணா மலையே
வடிவே குரு பரனே அருள்
வாடா மலர் முகனே