Adiguru – Jiva Tattvam
ஆதிகுரு தக்ஷிணாமூர்த்தி துதி
ஆன்ம தத்துவ அருள் வேண்டல்
நீர்
வாருலகப் பேருயிர்கள் வாழவே வளியொடு
வந்துறையும் தீயின் அருளால்
வளியாகக் கார்முகில் வழியாகக் கடலாக
வழிந்தோடும் நதிவடிவ தால்
பாருலகப் பலனடைய நீருரவ நலனாகப்
படைத்தருளும் பேரமிர் தமாய்
பாதாதி கேசமுமு நீராதி யானதுடற்
பாத்திரம் படைத்த நிலையால்
சாருமதி யாளருடல் சரிஈரம் என்பதாய்
சத்தியம் நீரின் நிலையே
சங்கரா சிவகங்கை மங்களா சுயம்புவே
சக்திவடி வான கலையே
போருலக ஆசைமதி நீரிளக வைத்தெனை
புதுப்பித்து அருள வேண்டும்
புத்தனே சிவஞான சித்தனே மோனவழி
போதிக்கும் ஞான குருவே