Adiguru – Jiva Tattvam
ஆதிகுரு தக்ஷிணாமூர்த்தி துதி
ஆன்ம தத்துவ அருள் வேண்டல்
மண்
மண்ணுலகு என்பதொரு மாயாவி நோதமே
மாபூத மைந்தின் மையம்
மருவிடும் உயிர்க்கெலா முருவமுஞ் சமைத்திடும்
மண்பாண்ட மென்ப தையம்
எண்ணளவு மில்லையிது ஏற்புடைய தாகவுயிர்
எழுச்சிக்கு வைத்த டு
எண்புறமும் விண்வெளியில் கண்பரவும் வரையிலே
ஏதொன்று மில்லை ஈடு
உண்ணுவது முடுப்பதும் ஓடியே உழைப்பதும்
உயர்வதும் அயர்வ தான
உலகியல் யாவுமே நிலவிடப் பொறுமையாய்
உதவிக்கு வைத்த வையம்
பண்ணுதற் கரியனே பரமனே கருணையால்
படைத்துக் கிடைத்த காயம்
பாவித்து நானுலகைச் சேவிக்க வேண்டினேன்
பரசிவனே ஞான குருவே