Adiguru – Jiva Tattvam
ஆதிகுரு தக்ஷிணாமூர்த்தி துதி
ஆன்ம தத்துவ அருள் வேண்டல்
கர்மேந்திரியம் – வாய்
நாச்சுவை மொழியிலே நச்சினம் மறையவே
நல்லதே பேச வேண்டும்
நாகாத்து நேரத்தில் நலமான வார்த்தைகள்
நாவிலே வீச வேண்டும்
மூச்சான சத்தியம் முகரவேண்டும் மனம்
முளைப்பதே மொழிய வேண்டும்
முன்னே ஓர்சொலும் பின்னே கோள்சொலும்
முறைகேடு ஒழிய வேண்டும்
வீச்சான சுடுசொலை விடவேண்டும் திருவருள்
வேதம் உரைக்க வேண்டும்
வில்லான நாவில்சுடு சொல்லான அம்புகள்
விடுதலை மறைக்க வேண்டும்
பேச்சான கருவியே பெரியவா னத்திடை
பிரதியாக வைத்த தேவே
பெருமானே தென்நோக்கில் உருவான குருஞானி
பேரழகே மோன வடிவே