Adiguru – Jiva Tattvam

Adiguru – Jiva Tattvam

ஐம்பூதங்கள்,ஐந்து வாயுக்கள்,ஐம்புலன்,ஐம்பொறி, மனம், சித்தம், புத்தி, அகங்காரம் எனும் அந்தகரணங்கள் ஆகிய இருபத்து நான்கு தத்துவங்களும் அசுத்த தத்துவங்களாக, ஜீவாத்மா விளக்கமாகக் காட்டப்பட்டது

Adiguru – Vidya Tattvam

Adiguru – Vidya Tattvam

சுத்தாசுத்த தத்துவெனும்படி, சக்தியாகிய மாயை விளைக்கின்ற காலம், அக்காலத்துக்குள் விளங்கும் நியதி எனும் விதி, நியதிக்கேற்பப் பரவும் கலை எனும் குண வேறுபாடு, அக்குண வேறுபாட்டை ஒட்டி எழும் அராகம் எனும் இச்சை, இவற்றுடன் இயங்கும் அறிவு – இவ்வைந்தும் வெளிப்பட்டு, அதன் மூலமாக வெளிப்படும் புருடன் எனும் தத்துவமாகக் காட்டப்பட்டது

Adiguru Dhakshinamurthy – Siva Tattvam

Adiguru Dhakshinamurthy – Siva Tattvam

சிவ தத்துவ அறிவு விளக்கம் – சிவம், சக்தி, சதாசிவம், மஹேஸ்வரம், சுத்த வித்யா எனும் ஐந்து சிவ தத்துவ அறிவு விளக்கம் வேண்டல்.

Adiguru Dhakshinamurthy – Guru Worship

Adiguru Dhakshinamurthy – Guru Worship

குருவரம் ஒன்றே தருவது மனிதரின் – புருஷார்த் தமெனும் போதனை நான்கு
தர்மம் அர்த்தம் காமம் மோக்ஷம் -தத்துவம் நான்மறை தருவது கேட்க

Adiguru Dhakshinamurthy – Foreword

Adiguru Dhakshinamurthy – Foreword

பல கோயில்களுக்கும், மீண்டும் மீண்டும் சென்று, சித்திரங்களை வரைவது கண்டு, நண்பர்கள் ஏன் போட்டோ எடுத்து வைத்துக் கொண்டு வரையக்கூடாது என நல்லெண்ணத்தால் யோசனை கூறினர். கண்களால் மீண்டும் மீண்டும் தரிசித்து, மனதில் தியானத்தால் யூகித்து, மதியால் தீவிர யோசித்து சித்திரங்களை வரையும் வாய்ப்பைவிட வேறு என்ன பாக்கியம் வேண்டும்?

Adiguru Dhakshinamurthy – Prelude

Adiguru Dhakshinamurthy – Prelude

முதற்பாடல் மாணவர்களாகிய நமக்கு உரித்தான கடமைகளையும், ஜகத்குருவாகிய ஸ்ரீதட்சிணாமூர்த்தியின் திருவுருவ அழகையும் விளக்குகிறது. அடுத்த 24 பாடல்களும், உயிர்களுக்கு ஆதாரமான தத்துவங்களில் ஞானசுத்தி அடையக்கோரி, ஜகத்குருவிடம் வேண்டுகின்றன.

Adiguru Dhakshinamurthy

ஆதி குரு தக்ஷிணாமுர்த்தி வழிபாடு காஞ்சி ஸ்ரீமடம் ஸ்ரீ குரு ஆசியுரை நாள் – 26 – 03 – 98 ஜனன, மரண, துக்கச் சேததக்ஷம் குரும் நமாம: ஞானதாதாவான குருவிற்கு மேம்பட்டவரில்லை என்றே பெரியோர் கூறுவர். எல்லா குருவரர்களுக்கும் குருவான ஸ்ரீபரமேஸ்வரன் தானே விரும்பி எடுத்துக் கொண்ட திருக்கோலம் ஸ்ரீதக்ஷிணமூர்த்தி. முதியவர்களுக்கும் முதியவராக, முன்னவருக்கும் முன்னவராக இருப்பவர் பரமயுவாவாகக் காட்சி தருகிறார். மரங்களில் மூத்ததும், அரசுமான வனஸ்பதியான ஆலமரத்தின் அடியில் ப்ரும்ம ஸ்ருஷ்டியில் முதலில் படைக்கப் பெற்றிருந்தும் வயதால் எல்லோருக்கும் மூத்தவராயினும், பாலவடிவிலே, ஞான உபதேசம் பெரும் ஆர்வத்தால் எப்போதும் ஸநாகாதி யோகியர் சிஷயர்களாகத் தன்னைப்

Read More