01 Arjuna Vishada Yoga

श्रीमद्भगवद्गीता

ஶ்ரீமத்₃ப₄க₃வத்₃கீ₃தா

॥ ॐ श्री परमात्मने नमः ॥

ஓம் ஶ்ரீ பரமாத்மனே நம​:

अथ प्रथमोऽध्यायः – ॥ अर्जुनविषादयोगः ॥

அத₂ ப்ரத₂மோ(அ)த்₄யாய​: . அர்ஜுனவிஷாத₃யோக₃​:

பாகம் 1 – அர்ச்சுனன் துயரம்

உரையாடலில் ஸ்ரீ பகவத்கீதை பாகம் – 1

1 (குருட்சேத்திரத்தில் போர் ஆரம்பிக்கிறது. அந்தகன் திருதராட்டிரன் சஞ்சயன் மூலமாக நடப்பதை நடந்தவாறு அறிய விரும்புகிறான்.)

பாண்டவர் ஐவர் அந்தப் பாவிகள் பப்பத் தோடு
ஆண்டவர் சாட்சியாக அணையு போர் முகத்தே
நீண்டதோர் செயலை எல்லாம் நிகழ்த்திடும் சஞ்சய னையன்
வேண்டுந் திருதராட் டிரனுக்கு விளம்பிட முயலு கின்றான்
த்₄ருதராஷ்ட்ர உவாச .
த₄ர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே ஸமவேதா யுயுத்ஸவ​: |
மாமகா​: பாண்ட₃வாஶ்சைவ கிமகுர்வத ஸஞ்ஜய (1-1||

धृतराष्ट्र उवाच ।

धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेता युयुत्सवः ।
मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय ॥ १-१॥

திருதராட்டிரன் கேள்வி

2 (1-1) அறநிலமாகிய குருநிலத்தில் திரண்ட பாண்டவர்களும்,நம்மவர்களும் என்ன செய்கிறார்கள்? சஞ்சயா, நடப்பதைச் சொல்.

அறம்பெறுங் களத்தே நின்ற ஐயிரு பத்துச் செல்வர்
தரம்பெறத் தகுதி இல்லாத் தயக்கத்தால் விழியில் நற்கோ
திறம்பெறப் பொருது வோர்கள் தீயெனப் புறப்பட் டாரா
நிறம்எது நிலமை எதுவாய் நீபுகல் சஞ்சய என்றான்

3 (கண்ணனின் தூது தூதுமறுத்ததால் வரும் துயரங்கள்தான் எத்தனை? )

யாதுவினை உள்ள தங்கு யாருக்கு இயமன் பேறு
சூதுவிளை யாடும் கூடம் சுற்றிடும் பேய்கள் கண்ணன்
துாதுகுறை யாகிப் போனால் துன்பமே ஆகும் என்ற
வாதுஉணர் சஞ்சய னையன் வழக்கினைக் கூறு கின்றான்
ஸஞ்ஜய உவாச .
த்₃ருஷ்ட்வா து பாண்ட₃வானீகம் வ்யூட₄ம் து₃ர்யோத₄னஸ்ததா₃ |
ஆசார்யமுபஸங்க₃ம்ய ராஜா வசனமப்₃ரவீத் || 1-2||
सञ्जय उवाच ।

दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा ।
आचार्यमुपसङ्गम्य राजा वचनमब्रवीत् ॥ १-२॥

சஞ்சயன் உரை
4 (1-2) பாண்டவரது படையைப் பார்வையிட்டுவிட்டுத் தனது குருவாகிய துரோணர் அருகில் தனது தேரை நிறுத்தி, துரியோதனன் ஆற்றாமையினால் அவரைக் கூவி அழைத்துச் சொல்கிறான். துரியோதனன் துருபதனும் துரோணரும் எதிரிகள் என்பதை நினைவுபடுத்தும் வகையாக, திருஷ்டுத்யுமனை துருபதனின் பிள்ளை என்பதைச் சொல்லி

ஆவது நவிலக் கேட்க அரசனே துரியோ தனனே
மேவது பார்க்க எண்ணி மெல்லத்தன் தேரைத் தள்ளிப்
பாவல னாவான் துரோணர் பக்கத்தில் நிறுத்திச் சொல்லும்
நாவது நயந்த வார்த்தை நவிலுவேன் அறியக் கேட்க
பஶ்யைதாம் பாண்டு₃புத்ராணாமாசார்ய மஹதீம் சமூம் .
வ்யூடா₄ம் த்₃ருபத₃புத்ரேண தவ ஶிஷ்யேண தீ₄மதா || 1-3)
पश्यैतां पाण्डुपुत्राणामाचार्य महतीं चमूम् ।
व्यूढां द्रुपदपुत्रेण तव शिष्येण धीमता ॥ १-३॥

5 (1-3) துரோணரே, உமது சீடரன துருபதனின் மகன் யூகியின் படை அமைப்பைப் பாருங்கள் என்று தமது குருவான துரோணரைக் கூவி அழைக்கிறான்.

துருபதன் செல்வன் யூகி துணிவுடன் வகுத்து வைத்த
அருமையாம் ஐவர் வீரர் அமைப்பினை வந்து காண
குருவெனுந் துரோணர் தம்மைக் கூவியே யழைத்த மூடன்
திருதராட் டினனின் மூத்த தீயினை ஒத்த மைந்தன்
அத்ர ஶூரா மஹேஷ்வாஸா பீ₄மார்ஜுனஸமா யுதி₄ |
யுயுதா₄னோ விராடஶ்ச த்₃ருபத₃ஶ்ச மஹாரத₂​: (1-4)
अत्र शूरा महेष्वासा भीमार्जुनसमा युधि ।
युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः ॥ १-४॥

6 (1-4) இங்கு யுயுதனன், விரதன், தேர் ஓட்டத்தில் சிறந்த துருபதன் என வில்லாளிகளுக்குத் தலவர்களுமான வில்விற்பன்னர்களும் அர்ச்சுனனையும் பீமனையும் நிகர்த்தவராயிருக்கிறார்கள்.

பீம விஜய வீரரைப் பிணையத் தகுதி யானவர்
வீர விரதன் யுயுதனன் விரைதேர் அதிபன் துருபதன்
ஆக வலியர் ஆனவர் ஆர்ப்ப ரித்துப் போர்க்களம்
வேக மாகக் காரிய வினை முடிக்க நிற்கிறார்
த்₄ருஷ்டகேதுஶ்சேகிதான​: காஶிராஜஶ்ச வீர்யவான் |
புருஜித்குந்திபோ₄ஜஶ்ச ஶைப்₃யஶ்ச நரபுங்க₃வ​: (1-5)
धृष्टकेतुश्चेकितानः काशिराजश्च वीर्यवान् ।
पुरुजित्कुन्तिभोजश्च शैब्यश्च नरपुङ्गवः ॥ १-५॥

7 (1-5) திருஷ்டகேது, கேசிதானம், வீரனான காசிராஜன், புருஜித்,குந்திபோஜன், சைப்யன் எனும் சிறந்தோர் இருக்கிறார்கள்.

விசயனைப் போன்று வல்வில் விற்பனர் பலநூ றாக
திசையெலாம் நின்ற காட்சி திருட்டகே துகேசி தானம்
இசையுடன் காசி ராசன் இன்னுமோர் தீரன் சைப்யன்
வசையிலாக் குந்தி போதன் வல்லவன் புருசித் தோடு
யுதா₄மன்யுஶ்ச விக்ராந்த உத்தமௌஜாஶ்ச வீர்யவான் |
ஸௌப₄த்₃ரோ த்₃ரௌபதே₃யாஶ்ச ஸர்வ ஏவ மஹாரதா₂​: (1-6)
युधामन्युश्च विक्रान्त उत्तमौजाश्च वीर्यवान् ।
सौभद्रो द्रौपदेयाश्च सर्व एव महारथाः ॥ १-६॥

8 (1-6) வலியன் உதாமன்யு, ஆண்மை மிக்க உத்தமெªஜஸ் எனும் சுபத்திரையின் மகன் அபிமன்யு மற்றும் திரௌபதியின் மக்கள் அனவரும் தேர் வல்லுனர்கள்.

வல்லவன் உதா மன்யு வார்த்தசு பத்திரையாள் பெற்ற
வில்லவன் உத்த மௌஜஸ் வீரராய் திரௌபதி உற்ற
பிள்ளைகள் எல்லாம் வல்லர் பேருடை தேர்களம் சுற்ற
வெல்லுவர் போலே வீரம் விளம்பிட நிமிர்ந்து நின்றார்
அஸ்மாகம் து விஶிஷ்டா யே தான்னிபோ₃த₄ த்₃விஜோத்தம |
நாயகா மம ஸைன்யஸ்ய ஸஞ்ஜ்ஞார்த₂ம் தான்ப்₃ரவீமி தே (1-7)
अस्माकं तु विशिष्टा ये तान्निबोध द्विजोत्तम ।
नायका मम सैन्यस्य संज्ञार्थं तान्ब्रवीमि ते ॥ १-७॥

9 (1-7) அந்தணரான துரோணரே, மற்றும் உள்ள வீரர்களே, நம்முடைய படைகளையும், எதிரிகளுடைய பெயர்களையும் நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம் அதனால் சொல்வேன். (கேட்டு எதிரிகளை அழியுங்கள்.)

இருமுறைப் பிறப்பா லேற்ற மிருத்திய துரோணா எந்தன்
வரைமுறை ஏற்பா லிங்கே வந்திட்ட வீரா சேனா
மறுமுறை நிலைப்ப தறியா மரணத்தை அஞ்சாப் படைகாள்
ஒருமுறை பெயரைக் கேட்பீர் ஒழிப்பீர் பகையைத் தூராய்
ப₄வான்பீ₄ஷ்மஶ்ச கர்ணஶ்ச க்ருபஶ்ச ஸமிதிஞ்ஜய​: |
அஶ்வத்தா₂மா விகர்ணஶ்ச ஸௌமத₃த்திஸ்ததை₂வ ச (1-8)
भवान्भीष्मश्च कर्णश्च कृपश्च समितिञ्जयः ।
अश्वत्थामा विकर्णश्च सौमदत्तिस्तथैव च ॥ १-८॥ (सौमदत्तिर्जयद्रथः)

10 (1-8) நம்முடன் பீஷ்மர், கர்ணன், விரோதிகளை வெல்லும் கிருபன், அசுவத்தாமன், சயரதன், சோமதத்தன் என்று வலியோர் உள்ளனர்.

மாமுனி பீஷ்மன் கிருபன் மாபெரும் வீரன் கர்ணன்
பூவினி தான துரோண புத்திரன் அசுவத் தாமன்
சாவினி தென்ற தறியா சயரதன் சோம தத்தன்
மேவினி களத்தே நின்று மெய்சிலிர்த் திருப்ப தென்ன?
அன்யே ச ப₃ஹவ​: ஶூரா மத₃ர்தே₂ த்யக்தஜீவிதா​: .
நானாஶஸ்த்ரப்ரஹரணா​: ஸர்வே யுத்₃த₄விஶாரதா₃​: (1-9)
अन्ये च बहवः शूरा मदर्थे त्यक्तजीविताः ।
नानाशस्त्रप्रहरणाः सर्वे युद्धविशारदाः ॥ १-९॥

11 (1-9) இன்னும் பலவீரர்கள் என்பொருட்டு உயிரையும் கொடுக்க முன்வந்து, பலவிதமான அயுதங்களுடன் யுத்தத்தில் சிறந்தவர்களாக இருக்கிறார்கள்.

ஆவியைத் தந்தும் எந்தன் அன்பினைக் காப்ப தற்கும்
தாவியே பாட்டன் வள்ளல் தனயன் உறவு மற்றும்
மேவியில் உள்ள வீரம் மேம்பட்ட பலரும் இன்று
கூவிநிற் கின்ற காட்சி குறிப்பதே உமது மாட்சி
அபர்யாப்தம் தத₃ஸ்மாகம் ப₃லம் பீ₄ஷ்மாபி₄ரக்ஷிதம் |
பர்யாப்தம் த்வித₃மேதேஷாம் ப₃லம் பீ₄மாபி₄ரக்ஷிதம் (1-10)
अपर्याप्तं तदस्माकं बलं भीष्माभिरक्षितम् ।
पर्याप्तं त्विदमेतेषां बलं भीमाभिरक्षितम् ॥ १-१०॥

12 (1-10) பீஷ்மரால் காக்கப்படும் படை போதுமானதாக இல்லை (அளவற்றது?). பீமனால் காக்கப்படும் படை போதுமானது (அளவுக்கு அடங்கி உள்ளது?) (துரியோதனன் ஒருபுறமும் தமது படையை அளவற்றதாக உயர்த்தியும், அதே சமயத்தில் பொருத்தமற்றதாகப் பயந்தும் வியக்கிறான்.)

போது மானதா? இல்லை போரிடும் பீஷ்ம சேனை;
போது மானது எல்லை போர்த்திய பீம சேனை;
போது மோஇது! இவண் போருக்கு எனவே மனம்
மோது வோன் இவன் மொழிகின்ற துரியோ தனனே
ஆர்ப்பரித்த கடலைப் போலே அசலங்கள் திரளல் போலே
போர்ப்பறிக்க வந்தது நாமே போராத காலத் தாலே
நூற்பறித்த துகிலைப் போலே நுணுங்கிய புழுவைப் போலே
பார்ப்பறித்த படைகள் தானே பாண்டவர் பக்கம் காண்பேன்
அயனேஷு ச ஸர்வேஷு யதா₂பா₄க₃மவஸ்தி₂தா​: |
பீ₄ஷ்மமேவாபி₄ரக்ஷந்து ப₄வந்த​: ஸர்வ ஏவ ஹி (1-11)
अयनेषु च सर्वेषु यथाभागमवस्थिताः ।
भीष्ममेवाभिरक्षन्तु भवन्तः सर्व एव हि ॥ १-११॥

13 (1-11) எனவே, எல்லோரும் தம்முடைய இடத்தினை ஏற்று, பீஷ்மரையே காக்கக் கடவீர்.

ஆகட்டும் நாணை ஏற்று அவரவர் இடத்தை ஏற்று
ஏகட்டும் வெற்றி இன்று எதிரிகள் தோல்வி உற்று
சாகட்டும் நமது பீஷ்மர் சமீபத் திருந்து காற்றும்
தேகத்தைத் தொடாத வாறு தேக்கியே கடமை ஆற்று

14 (துரியோதனன் தமது படைவீரர்கள் முக்கியமாக பீஷ்மரைக் காக்க வேண்டும் என்றும், அதற்காக உயிரையும் கொடுக்க இதுவே நேரம் என்றும் ஊக்குவிக்கிறான்.)

வீரர்காள் வெகுண்டு நீர் விசயனின் மூத்தோள் காத்த
தீரர்காள் திசைகள் பரந்த திண்மையின் தலைவன் தன்னை
சாரமாய் வகுத்து நின்று சமரிட்டு உய்வ தற்கு
நேரமே இதுதா னென்று நின்றனன் துரியோ தனனே
தஸ்ய ஸஞ்ஜனயன்ஹர்ஷம் குருவ்ருத்₃த₄​: பிதாமஹ​:|
ஸிம்ஹனாத₃ம் வினத்₃யோச்சை​: ஶங்க₂ம் த₃த்₄மௌ ப்ரதாபவான் (1-12)
तस्य सञ्जनयन्हर्षं कुरुवृद्धः पितामहः ।
सिंहनादं विनद्योच्चैः शङ्खं दध्मौ प्रतापवान् ॥ १-१२॥

15 (1-12) துரியோதனனின் கலக்கத்தை உணர்ந்து, அவனை உற்சாகப் படுத்த கெªரவர்களின் பாட்டன் பீஷ்மர் சிங்கநாதம் செய்து தமது சங்கினை ஊதினார்.

கலங்கிய கவுர வர்கள் காட்சியை மாற்றி வீரம்
துலங்கிடச் செய் வதற்கு தூக்கிய சங்க நாதம்
விளங்கிடப் பீஷ்ம தேவன் விரித்திடும் சிங்க நாதம்
தளும்பிடத் திசைகள் பறைகள் தாரைகள் முழங்க லாகும்
தத​: ஶங்கா₂ஶ்ச பே₄ர்யஶ்ச பணவானககோ₃முகா₂​:|
ஸஹஸைவாப்₄யஹன்யந்த ஸ ஶப்₃த₃ஸ்துமுலோ(அ)ப₄வத் (1-13)
ततः शङ्खाश्च भेर्यश्च पणवानकगोमुखाः ।
सहसैवाभ्यहन्यन्त स शब्दस्तुमुलोऽभवत् ॥ १-१३॥

16 (1-13) அதனைத் தொடர்ந்து கெளரவர்களின் சங்கங்களும், பேரிகைகளும், தம்பட்டங்களும், பறைகளும், கொம்புகளும் தீடிரென ஒலிக்கத் தொடங்கி, அது எல்லா இடத்திலும் பேரொலியாகப் பரவியது.

அதனை அடுத்து இடிகள் அலையாய் சங்கின் ஒலிகள்
தததம் தமதம முழக்கம் தம்பட் டங்கள் பறைகள்
மோதிடும் பேரிகை கொம்பு மூட்டிய பேரொலி வகைகள்
தீதெனத் தீடிரெனக் கிளம்பும் திசைகள் வலியால் புலம்பும்
தத​: ஶ்வேதைர்ஹயைர்யுக்தே மஹதி ஸ்யந்த₃னே ஸ்தி₂தௌ |
மாத₄வ​: பாண்ட₃வஶ்சைவ தி₃வ்யௌ ஶங்கௌ₂ ப்ரத₃த்₄மது​: (1-14)
ततः श्वेतैर्हयैर्युक्ते महति स्यन्दने स्थितौ ।
माधवः पाण्डवश्चैव दिव्यौ शङ्खौ प्रदध्मतुः ॥ १-१४॥

17 (1-14) அப்போது வெள்ளைக் குதிரை பூட்டிய தேரில் இருந்த, விசயனும், கிருஷ்ணனும் தங்கள் தெய்வீகத்தன்மை வாய்ந்த சங்கங்களை முழங்கினார்.

வெண்ணிற மேகப் பந்தல் வெளிப்பட்ட மின்னல் கீற்று
தண்மழை பொழியு முன்னே தந்ததோ ரிடியைப் போன்று
பண்ணினை இசைத்து நல்லோன் பார்த்தனை உடன் இருத்தி
கண்ணனும் தேரில் வந்தான் கடியவெண் புரவி பூட்டி
பாஞ்சஜன்யம் ஹ்ருஷீகேஶோ தே₃வத₃த்தம் த₄னஞ்ஜய​: .
பௌண்ட்₃ரம் த₃த்₄மௌ மஹாஶங்க₂ம் பீ₄மகர்மா வ்ருகோத₃ர​: (1-15)
पाञ्चजन्यं हृषीकेशो देवदत्तं धनञ्जयः ।
पौण्ड्रं दध्मौ महाशङ्खं भीमकर्मा वृकोदरः ॥ १-१५॥

18 (1-15) கண்ணன் தனது பாஞ்சசைன்யம் என்ற சங்கினை முழங்க, அர்ச்சுனன் தேவதத்தம் எனும் சங்கை ஊத, அரிய செயலைச் செய்பவனும், ஓநாய் வயிற்றைப் போன்ற வயிற்றை உடைய பீமன் பவுந்தரம் எனும் சங்கினை எடுத்து ஒலித்தான்.

வானாய் வழங்கும் கண்ணன் வைத்தது பாஞ்ச சைன்யம்
தேனாய் முழங்கும் தனஞ்ஜயன் தேற்றுதல் தேவ தத்தம்
ஓநாய் வயிற்றால் ஒட்டிய ஒப்பிலாப் பலத்தால் கட்டிய
தானாய் வல்லிய பீமனும் தகைத்த சங்கு பவுந்தரம்
அனந்தவிஜயம் ராஜா குந்தீபுத்ரோ யுதி₄ஷ்டி₂ர​: .
நகுல​: ஸஹதே₃வஶ்ச ஸுகோ₄ஷமணிபுஷ்பகௌ (1-16)
अनन्तविजयं राजा कुन्तीपुत्रो युधिष्ठिरः ।
नकुलः सहदेवश्च सुघोषमणिपुष्पकौ ॥ १-१६॥

19 (1-16) குந்தி மகன் தருமன் அனந்த விஜயம் எனும் சங்கையும், நகுலனும், சகாதேவனும் முறையே சுகோஷம், மணிபுஷ்பகம் எனும் சங்கங்களை ஊதினர்.

தருமன் வைத்த சங்கு தக்கது அனந்த விஜயம்
நகுலன் வளர்த்த சங்கு நல்லது சுகோஷம் என்றும்
பகலத் தக்க சீலம் பார்க்கும் சகா தேவன்
மகுடம் வைத்த சங்கு மணிபுஷ் பகமே ஆகும்
காஶ்யஶ்ச பரமேஷ்வாஸ​: ஶிக₂ண்டீ₃ ச மஹாரத₂​: |
த்₄ருஷ்டத்₃யும்னோ விராடஶ்ச ஸாத்யகிஶ்சாபராஜித​: (1-17)
काश्यश्च परमेष्वासः शिखण्डी च महारथः ।
धृष्टद्युम्नो विराटश्च सात्यकिश्चापराजितः ॥ १-१७॥

20 (1-17) வில்வீரன் காசிராஜன், தேர் ஓட்டத்தில் தேர்ந்த சிகண்டி, திருஷ்ட்யுத்மன், விராடன், சத்யாகி ஆகிய பாண்டவரின் தளபதிகளின் சங்க நாதம்.

வல்லவன் காசி ராசன் வளியெனத் தேரை ஓட்டிச்
செல்லுவன் சிகண்டி யோடு சீரியன் திருஷட்யுத் மனனும்
மல்லவன் விரதன் மற்றும் மாவலி சத்யாகி என்று
உள்ளவர் எல்லாம் தத்தம் ஒலியினைப் பெருக்கி னாரே
த்₃ருபதோ₃ த்₃ரௌபதே₃யாஶ்ச ஸர்வஶ​: ப்ருதி₂வீபதே |
ஸௌப₄த்₃ரஶ்ச மஹாபா₃ஹு​: ஶங்கா₂ந்த₃த்₄மு​: ப்ருத₂க்ப்ருத₂க் (1-18)
द्रुपदो द्रौपदेयाश्च सर्वशः पृथिवीपते ।
सौभद्रश्च महाबाहुः शङ्खान्दध्मुः पृथक्पृथक् ॥ १-१८॥

21 (1-18) துருபதனும், திரெªபதியின் மக்களும், பூமியின் தலைவனான திருதராட்டிரனே, சுபத்திரையின் மகனும் தத்தம் சங்கினை முழங்கினர்.

பூமியாள் கோவே சங்கை பூரித்துத் துருபதன் ஊத
காமியாள் திரெªபதி ஈன்ற காரியக் காரர் ஊத
நேமியாள் சுபத்திரைக் கன்று நிச்சயித்தூத ஊத
பூமியாள் நாதம் அங்கே போர்க் கீதம் ஆனதென்ன!
ஸ கோ₄ஷோ தா₄ர்தராஷ்ட்ராணாம் ஹ்ருத₃யானி வ்யதா₃ரயத் |
நப₄ஶ்ச ப்ருதி₂வீம் சைவ துமுலோ(அ)ப்₄யனுனாத₃யன் (1-19)
स घोषो धार्तराष्ट्राणां हृदयानि व्यदारयत् ।
नभश्च पृथिवीं चैव तुमुलोऽभ्यनुनादयन् ॥ १-१९॥ (तुमुलो व्यनुनादयन्)

22 (1-19) பாண்டவர் எழுப்பிய போர் ஒலி, விண்ணிலும் மண்ணிலும் எதிரொலியைக் கிளப்பி, கெளரவரைக் கலக்கியது.

ஐம்பொறிச் சங்கை மாலன் அமர்க்களத் தூத ஊத
ஐவரும் தத்தம் சங்கை அனுபவித் தூத ஊத
ஐவரின் வீரர் கோடி யாகவர் ஊத ஊத
கையறு நிலையில் அதனைக் கவுரவர் காணும் காட்சி
22
பதில் ஒலி யாகப் பாண்டவர் போர் ஒலி
எதிர் ஒலி யாகி எதிர் வரும் பேரழி
புதிர் விதி யாகிப் புசித்தது கவு ரவர்
விதிர் விதிர்ப் பாகி வியர்த்தது வீரம்
அத₂ வ்யவஸ்தி₂தாந்த்₃ருஷ்ட்வா தா₄ர்தராஷ்ட்ரான் கபித்₄வஜ​: .
ப்ரவ்ருத்தே ஶஸ்த்ரஸம்பாதே த₄னுருத்₃யம்ய பாண்ட₃வ​: (1-20)
अथ व्यवस्थितान्दृष्ट्वा धार्तराष्ट्रान् कपिध्वजः ।
प्रवृत्ते शस्त्रसम्पाते धनुरुद्यम्य पाण्डवः ॥ १-२०॥

23 (1-20) திருதராட்டிரப் படை அணிவகுப்பைப் பார்த்துப் பிறகு குரங்குக் கொடியுடைய விசயன், திருதராட்டிரனே, வில்லைக் கையில் ஏந்தியபடி (இறுமாப்புடன்) கண்ணனிடம் தனது தேரைப் பகைவருக்கு நடுவில் நிறுத்தச் சொல்லுவான்.

நூற்றுவர் தலைவ கேட்க, நுழைந்து பின்நடுவில் சென்று
ஆற்றுவர் அமரில் வீரர் அனைவரைக் காண்ப தற்குப்
போற்றுவர் கண்ணா தேரைப் புறப்படச் செய்க என்பான்
வீற்றிறு செம்மல் மந்தி விளையுநற் கொடிபிடித் தோன்
ஹ்ருஷீகேஶம் ததா₃ வாக்யமித₃மாஹ மஹீபதே .
அர்ஜுன உவாச .
ஸேனயோருப₄யோர்மத்₄யே ரத₂ம் ஸ்தா₂பய மே(அ)ச்யுத (1-21)
हृषीकेशं तदा वाक्यमिदमाह महीपते ।
अर्जुन उवाच ।

सेनयोरुभयोर्मध्ये रथं स्थापय मेऽच्युत ॥ १-२१॥

விசயன் உரை
24 (1-22) போரை விரும்பி வந்தவர்களையும், ஆரம்பத்தில் யார்யாருடன் போர் செய்யவேண்டியிருக்கும் என நான் பார்க்க வேண்டும் என்று விசயன் கேட்டான்.

தீவினை உள்ளத் தாலே தீட்டிய வண்ணத் தாலே
சாவினை அள்ளத் தானே சமரிட எண்ணத் தாலே
மேவிய தாவர் என்றே மேற்கொண் டறிய வேண்டும்
காவிய நாதா கண்ணா காட்டிட விசயன் கேட்க
யாவதே₃தான்னிரீக்ஷே(அ)ஹம் யோத்₃து₄காமானவஸ்தி₂தான் |
கைர்மயா ஸஹ யோத்₃த₄வ்யமஸ்மின் ரணஸமுத்₃யமே (1-22)
यावदेतान्निरीक्षेऽहं योद्धुकामानवस्थितान् ।
कैर्मया सह योद्धव्यमस्मिन् रणसमुद्यमे ॥ १-२२॥
யோத்ஸ்யமானானவேக்ஷே(அ)ஹம் ய ஏதே(அ)த்ர ஸமாக₃தா​: .
தா₄ர்தராஷ்ட்ரஸ்ய து₃ர்பு₃த்₃தே₄ர்யுத்₃தே₄ ப்ரியசிகீர்ஷவ​: (1-23)
योत्स्यमानानवेक्षेऽहं य एतेऽत्र समागताः ।
धार्तराष्ट्रस्य दुर्बुद्धेर्युद्धे प्रियचिकीर्षवः ॥ १-२३॥

25 (1-23) கெடுமதி கொண்ட துரியோதனனைப் போரால் திருப்தி செய்வதற்காக இங்கு கூடியிருப்பவர்களை நான் பார்க்க விரும்புகின்றேன் என்றான்.

கெடுமதி கொண்ட பேர்கள் கேளிக்கை வயப் பட்டு
வெகுமதி யாகத் தத்தம் வேதத்தை ஆயு தத்தைத்
தருமதி யாளர் தம்மைத் தம்மிரு விழியில் நோக்க
கருமதி ஞானக் கண்ணா காட்சியை விசயன் கேட்க
ஸஞ்ஜய உவாச .
ஏவமுக்தோ ஹ்ருஷீகேஶோ கு₃டா₃கேஶேன பா₄ரத .
ஸேனயோருப₄யோர்மத்₄யே ஸ்தா₂பயித்வா ரதோ₂த்தமம் (1-24)
सञ्जय उवाच ।

एवमुक्तो हृषीकेशो गुडाकेशेन भारत ।
सेनयोरुभयोर्मध्ये स्थापयित्वा रथोत्तमम् ॥ १-२४॥

சஞ்சயன் உரை
26 (1-24) பரத நாட்டரசே, இவ்வாறு பார்த்தன் உரைத்ததைக் கேட்ட கண்ணன், தேரை இரண்டு படைகளுக்கும் இடையில் நிறுத்தி,

பாரத மன்னா சொன்ன பார்த்தனை சமர்ப் பணிக்க
மாரத முன்னே மின்ன மத்தியில் அமர்ப் பணிக்க
நேரத னாலே என்ன நிலையதை சுவர்ப் பிரிக்க
தேறுத லறியக் கண்ணன் தேர்தனை நிலை நிறுத்த
பீ₄ஷ்மத்₃ரோணப்ரமுக₂த​: ஸர்வேஷாம் ச மஹீக்ஷிதாம் .
உவாச பார்த₂ பஶ்யைதான்ஸமவேதான்குரூனிதி (1-25)
भीष्मद्रोणप्रमुखतः सर्वेषां च महीक्षिताम् ।
उवाच पार्थ पश्यैतान्समवेतान्कुरूनिति ॥ १-२५॥

27 (1-25) பீஷ்மருக்கும், துரோணருக்கும், மற்றுமுள்ள அரசர்களுக்கும் எதிரில் ஸ்ரீகிருஷ்ணர் தேரை நிறுத்தி, பார்த்தா, இங்கு ஒன்று திரண்டு இருக்கும் கெªரவர்களைப்பார் என்றார்

மூத்தோன் பீஷ்மன் முன்னே முன்னாசன் துரோணர் முன்னே
பூத்தோர் அரசர் முன்னே போரிட வந்தார் முன்னே
காத்தோன் இரதத்தைக் கட்டிக் காணடா கவுரவர் இங்கே
சாத்தோன் றறியா சாட்சி சந்திப்ப தறிவாய் என்றான்
தத்ராபஶ்யத்ஸ்தி₂தான்பார்த₂​: பித்ரூனத₂ பிதாமஹான் |
ஆசார்யான்மாதுலான்ப்₄ராத்ரூன்புத்ரான்பௌத்ரான்ஸகீ₂ம்ஸ்ததா₂ (1-26)
तत्रापश्यत्स्थितान्पार्थः पितॄनथ पितामहान् ।
आचार्यान्मातुलान्भ्रातॄन्पुत्रान्पौत्रान्सखींस्तथा ॥ १-२६॥

28 (1-26) அங்கு அர்ச்சுனன் இருதரப்பிலும், தந்தையரும், பாட்டன்மார்களும், ஆசிரியர்களும், மாமன்மாரும், சகோதரர்களும், பிள்ளைகளும், நண்பர்களும் (எதிரெதிராக) நிற்பதைக் கண்டான்.

ஈங்கென்ன தெரியும் அந்தோ இருபுறமும் உறவே பகைவர்
பாங்கென்ன பாட்டன் தந்தை பயன்குரு மாமன் தமயர்
தீங்கென்ன பிள்ளை நண்பர் திரும்பிய இடத்தில் தெரிவர்
நீங்கெனால் நீங்காச் சுற்றம் நின்றிங்கே விடத்தில் எரிவர்
ஶ்வஶுரான்ஸுஹ்ருத₃ஶ்சைவ ஸேனயோருப₄யோரபி |
தான்ஸமீக்ஷ்ய ஸ கௌந்தேய​: ஸர்வான்ப₃ந்தூ₄னவஸ்தி₂தான் (1-27)
க்ருபயா பரயாவிஷ்டோ விஷீத₃ன்னித₃மப்₃ரவீத் .
श्वशुरान्सुहृदश्चैव सेनयोरुभयोरपि ।
तान्समीक्ष्य स कौन्तेयः सर्वान्बन्धूनवस्थितान् ॥ १-२७॥

कृपया परयाविष्टो विषीदन्निदमब्रवीत् ।

29 (27) அவ்வாறே மாமன்களும், நண்பர்களும் இருதரப்பிலும் நிற்பதைக் கண்டான். இரக்கம் மிகுந்து கவலையுடன் சொல்வான்

தேர்தனை மையம் வைத்துத் தெய்வமாம் கண்ணன் சொல்ல
பார்தனைப் பார்த்தன் பார்த்தான் பார்த்தனை எல்லாம் அந்தோ
சேர்த்தனை உற்றார் உறவு செல்வமாம் நண்பர் என்று
வேர்த்தனன் உடலும் உள்ளம் வெந்தனன் துயரால் வெம்மை
அர்ஜுன உவாச .
த்₃ருஷ்ட்வேமம் ஸ்வஜனம் க்ருஷ்ண யுயுத்ஸும் ஸமுபஸ்தி₂தம் (1-28)
अर्जुन उवाच ।

दृष्ट्वेमं स्वजनं कृष्ण युयुत्सुं समुपस्थितम् ॥ १-२८॥

விசயன் உரை

30 (1-28) போரை விரும்பி இங்கு வந்திருக்கும் சுற்றத்தைக்கண்டு என் கைகால்கள் சோர்வடைகின்றன.

சண்டையிட வந்துள்ள சுற்றம் சங்கடமே என்மனமே வற்றும்
கண்டதனால் கைகால்கள் இற்றும் கவலையினி நெஞ்சத்தைச் சுற்றும்
விண்டதனால் உள்ளத்தில் குற்றம் விரயமிதால் விளைவென்ன முற்றும்
தண்டனையோ தளருவது கொற்றம் தாங்காது சோர்வென்னைப் பற்றும்
ஸீத₃ந்தி மம கா₃த்ராணி முக₂ம் ச பரிஶுஷ்யதி .
வேபது₂ஶ்ச ஶரீரே மே ரோமஹர்ஷஶ்ச ஜாயதே (1-29)
सीदन्ति मम गात्राणि मुखं च परिशुष्यति ।
वेपथुश्च शरीरे मे रोमहर्षश्च जायते ॥ १-२९॥

31 (1-29) வாய் உலர்கிறது. என்னுடல் நடுங்கும். மேனியின் மயிர்க்கால்களும் சிலிர்க்கும்.

கண்ணா உடல் நடுங்கும் கண்சுரக்கும் வாய் உலரும்
சொன்னால் மனம் பதைக்கும் சோர்வா யென் னுள்ளம்
புண்ணாய்ப் போகும் நான் புரிவேனோ அமர் இந்த
மண்ணா பெரி தெனக்கு மன்னித்து விடு என்றான்
கா₃ண்டீ₃வம் ஸ்ரம்ஸதே ஹஸ்தாத்த்வக்சைவ பரித₃ஹ்யதே |
ந ச ஶக்னோம்யவஸ்தா₂தும் ப்₄ரமதீவ ச மே மன​: (1-30)
गाण्डीवं स्रंसते हस्तात्त्वक्चैव परिदह्यते ।
न च शक्नोम्यवस्थातुं भ्रमतीव च मे मनः ॥ १-३०॥
32
நடுங்கிடும் உடல் நாவு நரம்புகள் புடைத் தது
மடங்கிடும் மயிர்க் கால் மரமென முளைத் தது
படர்ந்திடும் வயிற்றில் தீ பற்றியே எரிந் தது
கடந்திவன் தோள் வழி காண்டீபம் விழுந் தது

33 (1-30) ஆயுதமும் கை நழுவி விழும். உடலெங்கும் பற்றி எரிகிறது. என்னால் நிற்க முடியவில்லை. மனம் பதைக்கும்.

நடுங்கும் உடல் எரியும் நகரா நிலை சரியும்
நழுவும் வில் தவறும் நலியும் மனம் முறியும்
ஒடுங்கும் நிழல் அடியில் ஒளியும் பயம் தெரியும்
ஒழுகும் விழி பொழியும் உறவும் இனி அழியும்
நிமித்தானி ச பஶ்யாமி விபரீதானி கேஶவ .
ந ச ஶ்ரேயோ(அ)நுபஶ்யாமி ஹத்வா ஸ்வஜனமாஹவே (1-31)
निमित्तानि च पश्यामि विपरीतानि केशव ।
न च श्रेयोऽनुपश्यामि हत्वा स्वजनमाहवे ॥ १-३१॥

34 (1-31) கேசவா, விபரீதமான சகுணங்களைக் காண்கின்றேன். சுற்றத்தாரைக் கொன்று என்ன சுகத்தைக் காணப்போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. (உறவினரைக் கொல்வது பாவம். என்னைக் கோழை என்றாலும் பரவாயில்லை. நான் இவர்களைக் கொல்லேன் என நினைத்துப் புலம்புகிறான்.)

கேசவா மோசம் மோசம் கேவலம் நெஞ்சில் சோகம்
பூசுவ தாலே எந்தன் புத்திதடு மாறும் வாயும்
பேசுவ தறியா தாகும் பேரிடர் வருவ தாகும்
கூசிய தாலே கால்கள் குற்றத்தால் தங்க லாகும்
35
கூடப் பிறந்த கூட்டம் கொல்வது மிகவும் வாட்டம்
தேடக் கிடைத்த தென்ன தேறுதல் அறியா தாகும்
வாடப் பிறக்க வில்லை வாழ்க்கை அழிவில் இல்லை
பேடன் என்று என்னைப் பேசினால் ஒன்றும் இல்லை
ந காங்க்ஷே விஜயம் க்ருஷ்ண ந ச ராஜ்யம் ஸுகா₂னி ச |
கிம் நோ ராஜ்யேன கோ₃விந்த₃ கிம் போ₄கை₃ர்ஜீவிதேன வா (1-32)
न काङ्क्षे विजयं कृष्ण न च राज्यं सुखानि च ।
किं नो राज्येन गोविन्द किं भोगैर्जीवितेन वा ॥ १-३२॥

36 (1-32) போரில் நான் வெற்றியை விரும்பவில்லை. கிருஷ்ணா, நான் அரசுரிமையையோ சுகபோகத்தையோ விரும்பவில்லை. ஏனெனில் சுகபோகங்களால் என்ன பயன்? அல்லது உயிர் வாழ்வதில்தான் என்ன பயன்?

போரிலே வெற்றி வேண்டாம் போதிப்பாய் கிருஷ்ணா வேண்டாம்
பாரிலே பரிசாய் அரசோ பாவிக்கும் சுகமும் வேண்டாம்
யாருக்கு வேண்டும்? வேண்டாம் யாதுநல மாகும்? வேண்டாம்
பேருக்கு உயிர் வாழ்கின்ற பெருமையால் பயனோ? வேண்டாம்
யேஷாமர்தே₂ காங்க்ஷிதம் நோ ராஜ்யம் போ₄கா₃​: ஸுகா₂னி ச .
த இமே(அ)வஸ்தி₂தா யுத்₃தே₄ ப்ராணாம்ஸ்த்யக்த்வா த₄னானி ச (1-33)
येषामर्थे काङ्क्षितं नो राज्यं भोगाः सुखानि च ।
त इमेऽवस्थिता युद्धे प्राणांस्त्यक्त्वा धनानि च ॥ १-३३॥

37 (1-33) எவருக்காக நாம் அரசு, போகம், சுகம் இவற்றை விரும்புகிறோமோ, அவர்களெல்லாம் எல்லாவற்றையும் துறந்து (இங்கே சண்டையிட்டுச் சாக) வந்துள்ளாரே? என்னே பயன்?

யாருக்காய் நாமே இங்கு நியாயத்தைக் கேட்க வந்தோம்
போருக்காய் அவரே இங்கு புறப்பட்ட கொடுமை என்ன
வேருக்காய் விட்ட நந்நீர் வெறுந்தரைப் பட்ட தாகும்
பேருக்காய் வெற்றி பெற்று பெறுபவை மட்ட மாகும்
ஆசார்யா​: பிதர​: புத்ராஸ்ததை₂வ ச பிதாமஹா​: |
மாதுலா​: ஶ்வஶுரா​: பௌத்ரா​: ஶ்யாலா​: ஸம்ப₃ந்தி₄னஸ்ததா₂ (1-34)
आचार्याः पितरः पुत्रास्तथैव च पितामहाः ।
मातुलाः श्वशुराः पौत्राः श्यालाः सम्बन्धिनस्तथा ॥ १-३४॥

38 (1-34) ஆசிரியர்கள், தந்தைமார், சகோதரர்கள், பாட்டன்மார், அம்மான்மார், மாமன்மார், மைத்துனர்கள், மற்ற உறவினர்கள் (எல்லாம் இங்கே சண்டையிட வந்துள்ளார்களே, இவர்களை வென்று நான் அடைவது ஏது என விசயன் அயர்கின்றான்).

தேடச் சிறந்த நல்லாசன் தெளிய வளர்த்த தந்தையர்
கூடப் பிறந்த சோதரர் குடும்ப முதியோர் மாமனார்
நாடக் கலந்த உறவினர் நல்மாமன் மைத்துனர் மருமனார்
வேடம் புனைவரோ போரெனும் வேளைகழிக்க நின்றனர்
39
பாட்டனும் அன்பான மாமனும் பள்ளி வளர் தோழனும்
கேட்டால் உயிர்தந் தென் கேடறுக்கும் கேளி றும்
நாட்டால் நான் அடைவ தாகுமோ சொல் மாதவ
ஓட்டுவாய் தேரை ஓர் ஓரமாய் என்றயர்ந் தான்
ஏதான்ன ஹந்துமிச்சா₂மி க்₄னதோ(அ)பி மது₄ஸூத₃ன |
அபி த்ரைலோக்யராஜ்யஸ்ய ஹேதோ​: கிம் நு மஹீக்ருதே (1-35)
एतान्न हन्तुमिच्छामि घ्नतोऽपि मधुसूदन ।
अपि त्रैलोक्यराज्यस्य हेतोः किं नु महीकृते ॥ १-३५॥

40 (1-35) என்னை இவர்கள் கொல்வதாயிருந்தாலும், நான் மூன்று உலகத்தை ஆள்வதாயிருந்தாலும், நான் இவர்களைக்கொல்ல உடன்படமாட்டேன் என்றால், பூமிக்கு ஆசைப்பட்டு, இவர்களைக் கொல்வேனா?

மூவுல காளும் பேறு முடியுமென் றாலும் இந்தக்
காவுள கற்றோ ருற்றோர் கருணையைக் கொல்வ தேது
பூவுல காட்சிக் கோவோ புரிவேன் இந்தப் பாவம்
நாவுள நல்ல நீதி நயந்துயான் செல்வேன் என்றான்
நிஹத்ய தா₄ர்தராஷ்ட்ரான்ன​: கா ப்ரீதி​: ஸ்யாஜ்ஜனார்த₃ன |
பாபமேவாஶ்ரயேத₃ஸ்மான்ஹத்வைதானாததாயின​: (1-36)
निहत्य धार्तराष्ट्रान्नः का प्रीतिः स्याज्जनार्दन ।
पापमेवाश्रयेदस्मान्हत्वैतानाततायिनः ॥ १-३६॥

41 (1-36) ஜனார்த்தனா, துரியோதனன் முதலானவரைக் கொல்வதால் என்ன பயன்.

இப்பாவிகளைக் கொல்வதால், நமக்குப் பாவம்தான் வந்து சேரும்.

திருத ராட்டிரனின் மைந்தர் தீயவர் என்ப தாலே
பொருத லாகுமோ இங்கே போரிடல் நலமோ பாவம்
வருத லாகும் அதனால் வம்புக்குச் செல்ல வேண்டாம்
கருத லானது உள்ளம் கலங்கல் ஆனது ஜனார்த்தனா
42
கோவிந்தா எனக்குச் சொல்க கொள்வது யாது இந்தப்
பாவிகள் வதைவ தாலே பாவத்தைத் தவிர நாமே
ஏவிடும் பயன்தான் என்ன எண்ணத்தில் கொன்ற தாக
தீவினைப் படுதல் வேண்டும் தீராத கவலை ஏகும்
தஸ்மான்னார்ஹா வயம் ஹந்தும் தா₄ர்தராஷ்ட்ரான்ஸ்வபா₃ந்த₄வான் |
ஸ்வஜனம் ஹி கத₂ம் ஹத்வா ஸுகி₂ன​: ஸ்யாம மாத₄வ (1-37)
तस्मान्नार्हा वयं हन्तुं धार्तराष्ट्रान्स्वबान्धवान् ।
स्वजनं हि कथं हत्वा सुखिनः स्याम माधव ॥ १-३७॥

43 (1-37) ஆகையால் நாம் சுற்றத்தார்களாகிய துரியோதனன் முதலியோரைக் கொல்வது பாவம். மாதவா, நம்முடைய சுற்றத்தைக் கொன்று, நாம் எப்படி இன்பமாய் இருக்க முடியும்?

காதலால் உட னிருக்கும் காட்சியே சுற்றம் இங்கு
மோதலால் உற வழிக்கும் மோசமோ குற்றம் தீங்கு
ஆதலால் துரியோ தனரை அழிக்கின்ற பாவம் வேண்டாம்
மாதவா கொன்றோ யாமே மகிழ்ச்சியில் இருக்கக் கூடும்?
44
பாவமான தாலே கொலையே பரந்தாமா செய்ய வேண்டாம்
சாவதான மாகச் செல்வோம் சகஜமாய் எடுத்துக் கொள்வோம்
நோவதான தாகும் உறவோர் நோகிடச் செய்ய வேண்டாம்
போனதான காலம் மறப்போம் புறப்பட்டுச் செல்வோம் கண்ணா
யத்₃யப்யேதே ந பஶ்யந்தி லோபோ₄பஹதசேதஸ​: |
குலக்ஷயக்ருதம் தோ₃ஷம் மித்ரத்₃ரோஹே ச பாதகம் (1-38)
यद्यप्येते न पश्यन्ति लोभोपहतचेतसः ।
कुलक्षयकृतं दोषं मित्रद्रोहे च पातकम् ॥ १-३८॥

45 (38) பேராசையினால், குழம்பிய புத்தியுடைய இவர்கள், சமுதாயத்தில் உள்ள குடும்பங்களை அழிக்கத் துணிந்தாலும், நண்பர்களுக்குச் செய்யும் தீமையில் பாவத்தைக் காணவில்லை என்றாலும்,

பேராசை எனும் பேயால் பெருங் குழப்ப மயக்கத்தால்
தூரோசை இல்லா மல் துடைத் தழித்துக் குடும்பங்கள்
வேரோடு சாய்த் திடவும் வெட்கமின்றி நட்பி னுயிர்
கூரோடு ஏய்த் திவர்கள் கொடும் பாவம் அறியாரே
கத₂ம் ந ஜ்ஞேயமஸ்மாபி₄​: பாபாத₃ஸ்மான்னிவர்திதும் .
குலக்ஷயக்ருதம் தோ₃ஷம் ப்ரபஶ்யத்₃பி₄ர்ஜனார்த₃ன (1-39)
कथं न ज्ञेयमस्माभिः पापादस्मान्निवर्तितुम् ।
कुलक्षयकृतं दोषं प्रपश्यद्भिर्जनार्दन ॥ १-३९॥

46 (1-39) குடும்ப நாசத்தால் வரும் தீமைகளை நன்றாக அறிந்து கொண்டிருக்கும் நாம், ஜனார்த்தனா, ஏன், பாவச்செயலைச் செய்யாமல் விலகிப்போகக்கூடாது?

குடும்பத்தை அழிக்கும் பாவக் குற்றத்தை அறியார் அதனால்
கடும்பகை கொண்டார் இங்கு களம்புகுந் தழிக்க வந்தார்
நடுநிலை அறிவோம் குடிகள் நாசத்தை உணர்வோம் அதனால்
கொடும்பகை விடுவோம் அன்றோ கூறுவாய் ஜனார்த் தனா
குலக்ஷயே ப்ரணஶ்யந்தி குலத₄ர்மா​: ஸனாதனா​: |
த₄ர்மே நஷ்டே குலம் க்ருத்ஸ்னமத₄ர்மோ(அ)பி₄ப₄வத்யுத (1-40)
कुलक्षये प्रणश्यन्ति कुलधर्माः सनातनाः ।
धर्मे नष्टे कुलं कृत्स्नमधर्मोऽभिभवत्युत ॥ १-४०॥

47 (1-40) குடும்பங்கள் அழிந்தால், தொன்றுதொட்டு அவர்கள் செய்துவரும் பலவித தெய்வீகப் பழக்க வழக்கள் அழிந்து, அவை அழிவதால், விரும்பத்தகாத வழக்கங்கள் குடும்பத்தை ஆட்கொண்டுவிடும். (அதனால் கேடும் விளையும்.)

இல்லத்தில் அழிவு வந்தால் இதுகாலும் பண்பட் டோதும்
நல்லவை தளரும் இறைவன் நம்பிக்கை நலியும் அதனால்
அல்லவை வளரும் குறைகள் ஆவன நுழையும் பழக்கம்
உள்ளவை அழியும் தீமை ஊறிடும் நலம் கெடுக்கும்
அத₄ர்மாபி₄ப₄வாத்க்ருஷ்ண ப்ரது₃ஷ்யந்தி குலஸ்த்ரிய​: |
ஸ்த்ரீஷு து₃ஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ணஸங்கர​: (1-41)
अधर्माभिभवात्कृष्ण प्रदुष्यन्ति कुलस्त्रियः ।
स्त्रीषु दुष्टासु वार्ष्णेय जायते वर्णसङ्करः ॥ १-४१॥

48 (1-41) துர்ப்பழக்கங்களினால், கிருஷ்ணா, குடும்பப்பெண்கள் சீலமிழக்கிறார்கள். பெண்கள் ஒழுக்கம் கெடுவதால், சமூகத்தில் குழப்பம் ஏற்படுகிறது,

குடும்பத்தில் நாசம் வந்தால் குலமகள் மானம் போகும்
படுந்துயர் பட்டே வாழ்க்கை பாழ்பட்டு அழியப் போகும்
நடந்திடும் நியதி போகும் நியாயங்கள் மறைந்து போகும்
விடந்தொடும் சாதி பேதம் வியர்த்தம் விளைக்கக் கூடும்
49
ஓர்குடிப் பிறந்த மக்கள் ஒற்றுமை இன்றிப் போனால்
சீர்கெடும் செய்த தர்மம் சிதறிடும் வர்க்க பேதம்
ஊர்கெடப் பேசச் செய்ய உத்தமி உள்ளம் மாறும்
பார்கெடச் செய்வ தற்கோ பாரத யுத்தம் கண்ணா
ஸங்கரோ நரகாயைவ குலக்₄னானாம் குலஸ்ய ச |
பதந்தி பிதரோ ஹ்யேஷாம் லுப்தபிண்டோ₃த₃கக்ரியா​: (1-42)
सङ्करो नरकायैव कुलघ्नानां कुलस्य च ।
पतन्ति पितरो ह्येषां लुप्तपिण्डोदकक्रियाः ॥ १-४२॥

50 (1-42) குடும்ப ஓற்றுமையை அழித்தவர்களை, சமுதாயக் குழப்பம் நரகத்தில் தள்ளுகிறது. ஏனெனில் அவர்களுடைய முன்னோர்களும், பிண்டமும் நீருமின்றி அழிகிறார்கள். (அதாவது, ஆதரவற்று துன்பத்தில் ஆழ்கிறார்கள்)

எவரே குடிகெடுப் பார் எவரே நிலை யழிப்பார்
அவரே அவரால் முந்தை ஆனவர் நரகம் பட்டார்
தவறே அதனால் பிண்டம் தாகநீர் இல்லாக் கண்டம்
அவரே அடைவார் அணையா ஆழ்வினை சூழப் போவார்
தோ₃ஷைரேதை​: குலக்₄னானாம் வர்ணஸங்கரகாரகை​: |
உத்ஸாத்₃யந்தே ஜாதித₄ர்மா​: குலத₄ர்மாஶ்ச ஶாஶ்வதா​: (1-43)
दोषैरेतैः कुलघ्नानां वर्णसङ्करकारकैः ।
उत्साद्यन्ते जातिधर्माः कुलधर्माश्च शाश्वताः ॥ १-४३॥

51 (1-43) சாதிக்குழப்பத்தை உண்டாக்கும் இத்தகைய இழிச்செயல்களால், தெய்வீக தருமங்களும், குலக்கட்டுப்பாடும் அழிகின்றன.

சாதிக் குழப்ப மிட்டால் சாத்திர பேத மிட்டால்
வேதியர் வாத மிட்டால் வேதனை தருவ தற்காய்
ஓதிய கல்விப் பேறு ஒற்றுமை விட்டு விட்டால்
பாதியாய்ப் பகற் கனவாய் பாரதம் நலிந்து போகும்
52
சமுதாய வளனைக் குடும்ப சந்தோஷ நலனே காட்டும்
அமுதான தாகும் மக்கள் அன்போடு வாழ்ந்து காட்டும்
சமதான மில்லாத் தன்மை சமரிட்டுத் துயரந் தன்னை
அவமானப் படுத்த லானால் அடிப்படை உரிமை போகும்
உத்ஸன்னகுலத₄ர்மாணாம் மனுஷ்யாணாம் ஜனார்த₃ன |
நரகே நியதம் வாஸோ ப₄வதீத்யனுஶுஶ்ரும (1-44)
उत्सन्नकुलधर्माणां मनुष्याणां जनार्दन ।
नरके नियतं वासो भवतीत्यनुशुश्रुम ॥ १-४४॥ (नरकेऽनियतं)

53 (1-44) ஜனார்த்தனா, மதக்கோட்பாடுகளை (உணராமல்) அழிந்து போகச்செய்யும் செயலைச் செய்பவன் நரக வாழ்வைத்தான் அடையவேண்டி வரும். (நல்ல குடும்பத்தில் வந்த துயரமே நரகம். அதை நாமே செய்வதோ? (அது, குடும்ப ஒற்றுமை கெடுவதால் வருவது.)

நரகம் என்பது குடும்பம் நலங்கெட்ட தன்மை தானே
விரதம் வேள்வி எல்லாம் விட்டவர் செய்கை தானே
பரவும் உலகம் தருமம் பாவிக்க மறந்த தாலே
இரவும் விடிவ தில்லை இன்னல் மறைவ தில்லை

54 (1-44-1) எனவே, வேண்டாம் இந்தச் சண்டை.

ஆதலால் கண்ணா கேட்க ஆகாது இந்தச் சண்டை
மோதலால் விளையும் கேடு முறிந்திடும் சமுதாய நீதி
சாதலாய் ஆகும் உயிர்கள் சந்தியில் நிற்கும் வீடு
காதலாய் ஏற்றுக் கொள்க களத்தினை மீட்டுச் செல்க
அஹோ ப₃த மஹத்பாபம் கர்தும் வ்யவஸிதா வயம் |
யத்₃ராஜ்யஸுக₂லோபே₄ன ஹந்தும் ஸ்வஜனமுத்₃யதா​: (1-45)
अहो बत महत्पापं कर्तुं व्यवसिता वयम् ।
यद्राज्यसुखलोभेन हन्तुं स्वजनमुद्यताः ॥ १-४५॥

55 (1-45) ஐயகோ! அரச சுகத்தை எண்ணி, சுற்றத்தாரையே கொல்கின்ற பாவத்தைச் செய்யத் துணிந்தோமே!

ஐயகோ கொடுமை அற்பம் அரசென்னும் சிறுமை வேண்டி
கொய்யவே துணிந்தேன் உயிரைக் கூடிய உறவைத் தாண்டி
நெய்யவே துணிவோ பயனோ நேயத்தில் மடமை தூண்டி
செய்யவே இருந்தேன் குற்றம் செய்யேன் செய்வினை பாவம்
யதி₃ மாமப்ரதீகாரமஶஸ்த்ரம் ஶஸ்த்ரபாணய​: |
தா₄ர்தராஷ்ட்ரா ரணே ஹன்யுஸ்தன்மே க்ஷேமதரம் ப₄வேத் (1-46)
यदि मामप्रतीकारमशस्त्रं शस्त्रपाणयः ।
धार्तराष्ट्रा रणे हन्युस्तन्मे क्षेमतरं भवेत् ॥ १-४६॥

56 (1-46) ஆயுதங்கள் விட்டு, எதிர்க்காமல் நிற்கும் என்னை, ஆயுதம் தரித்து துரியோதனாதியர் கொன்றாலும், அதுவே எனக்குச் சிறந்தது.

ஆட்சியும் வேண்டேன் யான் அருமை தருஞ் செல்வத்து
மாட்சியும் வேண்டேன் யான் மண்ணோடு பொன் வேண்டேன்
காட்சியில் கொடிய திந்தக் களத்திடை உறவை உந்தன்
சாட்சியில் கொல்வ தாலோ சந்திப்பேன் பேறு என்றான்

57 (1-46.1) தலைவர்களாய் உள்ளவர்கள் தவறு இழைக்கக் கூடாது. எனக்கு இந்த ஆயுதமும், சண்டையும் வேண்டாம் என்றான்.

பண்புடைத் தலைவன் செய்யும் பாவமே பெருந்தீ ஓங்கி
எண்புறம் எரிக்கும் என்றால் ஏனவர் செய்வார் தீங்கு
அன்புடன் நிற்பேன் யானே ஆயுதம் வேண்டேன் யானே
துன்பமே வந்தால் கண்ணா துவளாது ஏற்பேன் என்றான்
ஸஞ்ஜய உவாச .
ஏவமுக்த்வார்ஜுன​: ஸங்க்₂யே ரதோ₂பஸ்த₂ உபாவிஶத் |
விஸ்ருஜ்ய ஸஶரம் சாபம் ஶோகஸம்விக்₃னமானஸ​: (1-47)
सञ्जय उवाच ।

एवमुक्त्वार्जुनः सङ्ख्ये रथोपस्थ उपाविशत् ।
विसृज्य सशरं चापं शोकसंविग्नमानसः ॥ १-४७॥

சஞ்சயன் உரை
58 (1-47) போர்க்களத்தின் மத்தியில் இவ்வாறு கூறி, விசயன் வில்லையும் அம்பையும் எரிந்துவிட்டு, புண்பட்ட மனத்தினாய் தேர்த்தட்டில் அமர்ந்த்து விட்டான்.

பலகடல் வேந்தே சொன்ன பார்த்தனும் எடுத்த வில்லை
நிலமகள் மீதே போட்டு நிலைதனை இழந்து தேர்க்கால்
அலகிலே அமர்ந்து விட்டான் ஆதவன் மாலைப் போதாய்
நிலவினான் நிலைமை இதுவாய் நிறுவினான் சஞ்சய னையன்
ஓம் தத்ஸதி₃தி ஶ்ரீமத்₃ப₄க₃வத்₃கீ₃தாஸூபனிஷத்ஸு ப்₃ரஹ்மவித்₃யாயாம் யோக₃ஶாஸ்த்ரே ஶ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே₃
அர்ஜுனவிஷாத₃யோகோ₃ நாம ப்ரத₂மோ(அ)த்₄யாய​: (1)
ॐ तत्सदिति श्रीमद्भगवद्गीतासूपनिषत्सु
ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे
अर्जुनविषादयोगो नाम प्रथमोऽध्यायः ॥ १॥

இவ்வாறு உபநிஷத்தும் பிரம்ம வித்தையும் யோகநூலும் ஸ்ரீ கிருஷ்ணார்ச்சுன ஸம்பாஷணையுமான ஸ்ரீமத் பகவத்கீதையில்
‘அர்ச்சுனன் துயரம்’ எனும் முதல் அத்தியாயம் நிறைவுறும்.

பிரார்த்தனை

2 – சாங்க்ய யோகம்

Related Posts

Share this Post