Sri Dakshinamurthy Stotram
PDF View
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம் – ஆதி சங்கரர்

குருவின் திருவடிகள் சரணம்
தத்துவமே மௌனமெனத் தந்தசிவ குருவடிவே
அத்துவித மாய்ந்தளித்த ஆதிகுரு சங்கரரே
நான்யார் எனமனதுள் நட்டவிதை பூத்ததனால்
தான்யார் எனவுணர்த்தும் தகைரமண பகவானே
பெரியவா என்றுலகப் பெருங்கருணை மழையான
அரியனே காஞ்சி ஆச்சார்யப் பேறமுதே
அத்துவித மாய்ந்தளித்த ஆதிகுரு சங்கரரே
நான்யார் எனமனதுள் நட்டவிதை பூத்ததனால்
தான்யார் எனவுணர்த்தும் தகைரமண பகவானே
பெரியவா என்றுலகப் பெருங்கருணை மழையான
அரியனே காஞ்சி ஆச்சார்யப் பேறமுதே
நிறைமொழியில் மறையுண்மை நிற்குமிவ் வேதத்தை
முறைநழுவா தினியதமிழ் முகிழ்த்தமுதத் தேக்குடத்தில்
இறையருளால் நிரப்புமிவன் இயலாமை தீர்த்தருள்க!
கரைகளிலாக் கருணைக் கடலேயென் கற்பகமே!






