Sri Dakshinamurthy Stotram

ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம் – ஆதி சங்கரர்

Adi Sankara

குருவின் திருவடிகள் சரணம்

தத்துவமே மௌனமெனத் தந்தசிவ குருவடிவே
அத்துவித மாய்ந்தளித்த ஆதிகுரு சங்கரரே
நான்யார் எனமனதுள் நட்டவிதை பூத்ததனால்
தான்யார் எனவுணர்த்தும் தகைரமண பகவானே
பெரியவா என்றுலகப் பெருங்கருணை மழையான
அரியனே காஞ்சி ஆச்சார்யப் பேறமுதே

நிறைமொழியில் மறையுண்மை நிற்குமிவ் வேதத்தை
முறைநழுவா தினியதமிழ் முகிழ்த்தமுதத் தேக்குடத்தில்
இறையருளால் நிரப்புமிவன் இயலாமை தீர்த்தருள்க!
கரைகளிலாக் கருணைக் கடலேயென் கற்பகமே!

Share this Post

Leave a Comment