Kasi Panchakam

காசி பஞ்சகம்

 

குருவின் திருவடிகள் சரணம்

 

தத்துவமே மௌனமெனத் தந்தசிவ குருவடிவே
அத்துவித மாய்ந்தளித்த ஆதிகுரு சங்கரரே
நான்யார் எனமனதுள் நட்டவிதை பூத்ததனால்
தான்யார் எனவுணர்த்தும் தகைரமண பகவானே
பெரியவா என்றுலகப் பெருங்கருணை மழையான
அரியனே காஞ்சி ஆச்சார்யப் பேறமுதே

காசீ பஞ்சகக் கருவூலம் மறைமொழியின்
வாசித்து அறியாத வழிமூலம் பெருவழியை
யோசித் தறிகவென ஓதுவித்த நற்குருவைப்
பூசித்து உணருமிப் பொழுதன்றோ பொற்காலம்!

நிறைமொழியில் மறையுண்மை நிற்குமிவ் வேதத்தை
முறைநழுவா தினியதமிழ் முகிழ்த்தமுதத் தேக்குடத்தில்
இறையருளால் நிரப்புமிவன் இயலாமை தீர்த்தருள்க!
கரைகளிலாக் கருணைக் கடலேயென் கற்பகமே!

Share this Post

Leave a Comment